
எத்தனையோ நாள் கனவுகண்டது உண்டு ----- மீண்டும் சிறு குழந்தையாக மாறுவது போல் ---- அந்த நாட்கள் திரும்ப கிடைக்காத அந்த சந்தோசம் மீண்டும் திரும்பாதா என ஏங்குகிறேன். அந்த பரிசுத்தமான உள்ளம், எதிர்பார்ப்பு இல்லாத வாழ்கை, கனவுகள் இல்லாத காலம், கஷ்ட நஷ்டம் புரியாத வயது, கவலையை மறந்த உறக்கம், அக்மார்க் சுத்தமான சிரிப்பு, அனைவரும் ரசிக்ககூடிய மழலை மொழி, தெருவில் விளையாடும் சுகம், எதையும் செய்ய கூடிய துணிவு, எளிதில் மறக்க முடிகின்ற சோகம், எதையும் எதிர் கொள்ளும் துணிவு, சுதந்திரமான சுவாசம், விரைவில் மறக்கக்கூடிய சோகம் , என்றும் அழியாத ஆர்வம் ...... இனி திரும்ப கிடைகாது அந்த காலம் .... அதுவே நம் அனைவரின் வாழ்விலும் பொற்காலம்..... உன்னில் திரும்பாத அந்த மழலை உணர்வை உன் பிள்ளை இடம் பாராட்டு ...